Tuesday, August 11, 2009

பட்டணம்தான் போகலாமோடி... Part II

I was still driving and பாச்சா and I exchanged information on our families. பாச்சா seemed to be a nice person and easy to get along with. But sometimes too easy too soon leads to uneasiness.

நான் - அப்பறம் எங்கேயாவது சுத்தி பாத்தீங்களா?
பாச்சா - சொல்ல மறந்துட்டேனே, இன்னிக்கு morning JCPENNEY- early bird sale போட்டிருந்தான், 8 to 11, I was fortunate to be there to make some purchase.
Dhoda - மயிலாபூர் ராசி சில்க்ஸ் ஆடி தள்ளுபடி போல் நெனசுண்டார் போல, அமெரிக்காவில் தேசி மக்கள் தினம் தினம் அதிகமாய் உபயோகிக்கும் வார்த்தைகள் Sale, Deal, Mall. இங்கே நித்யம் sale தான்.
நான் - ரொம்ப நல்லது. ஆத்துக்கு எல்லாம் வாங்கியாச்சு இல்லையா?
பாச்சா - இல்லாமயா? அப்பறம் இங்கே ரோடெல்லாம் நம்பர் போட்டிருக்கே, பேரு கெடயாதா?
நான் - ஆமாம் சார், இங்கே எல்லாமே நம்பர் தான். Traffic rules follow பண்ணறது ரொம்ப அவசியம், especially school zone பாருங்க இங்க, பசங்க வந்து போறச்சே நிறுத்தி வழிவிடணும்.
பாச்சா - அது சரி, road cross பண்ணற பய்யன் school-லதான் படிக்கறான்னு எப்படி தெரியும்? என்று சொல்லி பாச்சா சிரிக்க, dhoda என்று நானும் சிரித்து வைத்தேன்.

பேசிக்கொண்டிருந்ததில் வீடு வந்துவிட்டது. சாட்டிலைட்டில் Star Vijay பாத்ததும் ரொம்ப குஷியானார் பாச்சா.

பாச்சா - இந்த மாதிரி 47 inch LCD ஒன்னு இங்கேர்ந்து இந்தியா வாங்கிண்டு போகணும் சார், முடியுமா?
Dhoda - NTSC/PAL conversion, 110-220 volts வித்தியாசங்களை விவரிக்க திராணி இல்லாமல், "அங்கெல்லாம் இந்த TV வேல செய்யாது" என்று பொதுவாக சொன்னேன்.

அமெரிக்காவில் microwave, cell phone waves, cane sugar, Subway சாண்ட்விச்சில் கடைக்காரன் மாற்றாத gloves போன்ற பயங்களை பகிர்ந்து கொண்டார், லால்குடியிலிருந்து நேராக Los Angeles வந்திருக்கும் பாச்சா.

என் மனைவி சமைத்திருந்த வத்தகுழம்பும், கத்திரிக்காய் வதக்கலையும் நன்றாக ஒரு பிடி பிடித்தார் பாச்சா. கண்ணில் கண்ணீர் வராத குறையாக சொன்னார் "அப்படியே ஆத்து சாப்பாடு மாதிரியே இருக்கு, நாக்கு செத்துடுத்து".

Dhoda - ஆத்துல பண்ணது ஆத்து சாப்பாடு மாதிரி இல்லாம எப்படி இருக்கும் என்பதுபோல என் மனைவி என்னை முறைத்தாள். ஒரு வாரம் வீட்டு சாப்பாடு சாப்டாததுக்கு இது கொஞ்சம் over reaction என்று நினைத்துக்கொண்டேன். ஒரு வழியாக பாச்சாவை ஒன்பது மணிக்கு drop செய்து வீடு திரும்பினேன்.

அடுத்த முறை மயில் போன் செய்த போது நான் கேட்ட முதல் கேள்வி "எப்பிடிரா சமாளிக்கரே?"

2 comments:

(Mis)Chief Editor said...

'அப்டியே ஆத்து சாப்பாடு மாதிரி இருக்கு'

தப்பா புரிஞ்சுண்டுடேளே!

அவாத்து சாப்பாடு மாதிரி இருக்குன்னு சொல்றார்னா!

Venkat said...

Sir,

"paachaa" like people will be very grateful if they are guided .

otherwise, they must atleast be told about the opinions in the open,so that they can end themselves or hide, rather than face ridicule.

 

© 2010Dhoda! | by Shankar